காதலை எதிர்த்த பெற்றோர்கள்; சிறுவன், சிறுமி தற்கொலை! – கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

புதன், 24 நவம்பர் 2021 (12:19 IST)
கள்ளக்குறிச்சியில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது 16 வயது மகள் நிவேதா அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்துள்ளார். அவரது வகுப்பை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற மாணவரும், நிவேதாவும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் தெரிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி கடைக்கு சென்ற நிவேதா மாயமாகியுள்ளார். இதுகுறித்து நிவேதாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கோமுகி ஆற்றில் சிறுமி ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸார் அது மாயமான நிவேதா என்பதை உறுதி செய்தனர்.

அதேசமயம் அந்த பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விசாரணையில் அது நிவேதாவை காதலித்த ஹரிகிருஷ்ணன் என தெரியவந்துள்ளது. வீட்டில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..

தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..

திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!

போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு வேட்டை: மூன்றே நாட்களில் 621 பேர் கைது! 296 கிலோ கஞ்சா பறிமுதல்..

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு போட்ட கேரள காங்கிரஸ் அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments