ஜெயலலிதா நினைவிடத்தில்...இபிஎஸ் – ஒபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்!!!

வெள்ளி, 7 மே 2021 (23:41 IST)
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாக்கள் தனியாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனையில் முன்னாள் சிஎம். இபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனிசாமி , பா. வளர்மதி, நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரைத்தேர்வு செய்யாமலேயே கூட்டம்  காலை 10 ஆம் தேதி 9 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் – ஒபிஎஸ் ஆதரவாளர்களிடையே  வாக்குவாதம் எழுந்ததாகவும்,  இந்த தேர்தலில்  ஏற்பட்ட தோல்விக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறிக் குற்றச்சாட்டு முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் உட்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments