Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறை சோதனைக்கு தகவல் கொடுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

வருமான வரித்துறை சோதனைக்கு தகவல் கொடுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

Written By Caston
Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (09:05 IST)
தமிழகத்தில் நேற்று எங்கு திரும்பினாலும் ஒரே ரெய்டு மயம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் 190 இடங்களில் சோதனை நடத்தி அதிரடியை காட்டியது மத்திய அரசு நேற்று. இந்த அதிரடி சோதனைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மத்திய அரசுக்கு அளித்த தகவல்களே காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவின் பல விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜக அந்த கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பாஜகவின் கட்டுப்பாட்டில் முதன் முதலாக வந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுகவின் நிதி தொடர்பாக பல தகவல்களை டெல்லிக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
 
அதன் பின்னர் ஈபிஎஸ் முதல்வராக வந்த பின்னர் அவரும் டெல்லிக்கு விசுவாசம் காட்ட அவரும் தனது பங்கிற்கு பல தகவல்களை அளித்துள்ளார். இந்த தகவல்களை வைத்து அதிமுகவின் பணத்தை கைப்பாற்ற தான் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுகிறது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் பணம் எங்கே இருக்கிறது என்ற ரகசியம் சசிகலா ஒருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாதாம். இதனால் ரெய்டில் எந்த தகவலும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.. தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் பாராட்டு...

சொறிஞ்சிவிட்டா ரூ.14 லட்சம் வருமானம்!.. புதுசா புதுசா யோசிக்கிறாங்க!...

ரூ.1,911.80 கோடி வங்கி இருப்பு.. ரூ.1,811.10 கோடி பிக்சட் டெபாசிட்.. 60,821 ஏக்கர் நிலம்.. பூரி மலைக்க வைக்கும் ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்கள்

பைக் டாக்ஸி சேவைக்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்..

3 நாட்கள் தொடர் விடுமுறை!.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments