ஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப வேண்டாம்; குறுந்தகவலில் விளக்கம்!!

வியாழன், 9 நவம்பர் 2017 (21:20 IST)
கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.  


 
 
அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. 
 
இந்நிலையில், ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது. இதனையடுத்து ஏர்செல் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  
 
இதற்கு ஏர்செல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது. 
 
அந்த குறுந்தகவலில், “ஏர்செல் தமிழகத்தில் இருக்கும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை!. உடனே நடவடிக்கை எடுத்த விஜய்!..

முதல்வர் விஜய்க்கு 17 துறை ஒதுக்கீடு!.... வெளியான அமைச்சரவை பட்டியல்!..

விஜயை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் வைத்த கமல்!.. முக்கிய அப்டேட்...

சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...

மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..

அடுத்த கட்டுரையில்
Show comments