Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவிழக்கப் போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - வானிலை ஆய்வு மையம்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:38 IST)

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அது மெல்ல வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆனால் இது புயலாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளதாக கூறப்பட்டது.

 

தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வந்த இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழையும், ஆந்திரா பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி?!.. விரைவில் அறிவிப்பு!...

மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்.. 2 மாதங்கள் உயிருக்கு போராடிய 28 வயது பெண் மரணம்..

நேபாளத்தில் பேரழிவு ஏற்பட்ட 3 நாட்களுக்கு பின் 6 வயது சிறுமி மீட்பு.. மண்ணுக்குள் இருந்து கேட்ட அழுகுரலால் தப்பித்த உயிர்..

நேபாளத்தில் உடல்கள் அழுகும் அபாயம்.. அரசே புதைக்க ஏற்பாடு.. உறவினர்கள் கேட்டால் தோண்டி எடுக்கப்படுமா?

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments