10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறையா? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

செவ்வாய், 28 ஜூலை 2020 (19:46 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கிட தமிழக அரசு உத்தரவிட்டது என்பது தெரிந்ததே 
 
ஆனால் ஒரு சில பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் குறித்த விபரங்கள் இல்லை என்பதால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறையை பின்பற்றலாமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேடு முறை மதிப்பெண்களை எப்படி கணக்கிடுவார்கள்? என்ற சந்தேகத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எழுப்பி வருவதால் இந்த பிரச்சனைக்கு அரசு எப்படி தீர்வு காணப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

எல்லாம் காட்டு

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments