ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (23:54 IST)

அகதிகளை மீட்க இந்திய கடலோரக் காவல் படை கப்பல் விரைவு.

ரஷிய ராணுவம் உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துப் போர்தொடுத்து வருகிறது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே               கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் ,டீசல் விலை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில்    நமது அண்டை நாடான இலங்கையில் பிரதமராக ராஜபக்சே ஆட்சி செய்து வரும் நிலையில் அங்கு  பொருளாதார நெருக்கடியில் திக்குமுக்காடி வருகிறது.

சுற்றுலாத்துறையைப் பெரிதும் நம்பியிருந்த  இலங்கையில், கொரொனாவால் 905 பாதிப்பு ஏற்பட்டது.  அன்னிய செலாவணி பற்றாக்குறை நிலவிவருகிறது. இதனால் இறக்குவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது .

இதனால்     அத்தியாசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஒரு முட்டை ரூ.28 க்கும், ஆப்பிள் ஒன்றின் விலை ரூ      .150  க்கும்,  பேரீட்சை ஒரு கிலோ ரூ .900க்க்கும் பெட்ரோல்  லிட்டர் ரூ.260 க்கும்  விற்கப்படுகிறது. 

சமீபத்தில், டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் ரூ.260ஆக சரிந்துள்ளது, இதனால் பொருட்கள்  விலை மேலும் அதிகரிக்கும் அபாயமுள்ளது. இலங்கை  நிதி அமைச்சர்,பசில் ராஜபக்சே இந்தியா வது கடனுதவி ஒப்பந்தம் தொடர்பாக பேசினார்.                குறிப்பாக சீனா, இந்திய பன்னாட்டு நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன் பெற்று தற்போதை நிலையைச் சரிக்கட்ட முயல்வதாக தகவல் வெளியானது.
 
 இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இலங்கை தமிழர்கள் 6 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.

4 -ம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட அகதிகளை மீட்க இந்திய கடலோரக் காவல் படை கப்பல் விரைவு.