சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலை நிகழ்ச்சி!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:39 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
 
75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 காவடி ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்றும் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?

கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments