3 பேரை கொடூரமாக கடித்த குதிரை சில நிமிடத்தில் ரத்தம் கக்கி பலி: கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (11:24 IST)
கடலூர் அருகே மூன்று பேர்களை கொடூரமாக கடித்த குதிரை ஒன்று திடீரென ரத்தம் கக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்ற பகுதியில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை தெருவில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென விரட்டி கடித்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த மேலும் இரண்டு பெண்களையும் குதிரை கடித்து உள்ளது. 
 
இதனால் படுகாயம் அடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குதிரையை பொதுமக்கள் துரத்தி சென்ற போது திடீரென குதிரை ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தது. 
குதிரையை கயிற்றால் பொதுமக்கள் கட்டி போட்ட நிலையில் சிறிது நேரத்தில் ரத்தம் கக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

சிங்கப்பெண் விழா ரத்து!.. ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு போன முதல்வர்!.. கொதிக்கும் நெட்டிசன்கள்!..

திருச்செந்தூர் கோவிலில் லஞ்சம்!.. 2 காவலர்கள் டிஸ்மிஸ்!.. ஐயருக்கு பூஜை செய்ய தடை!...

லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரமேஷ்.. வெறும் மன்னிப்பு கடிதம் எல்லாம் கிடையாது...

தகுதியற்ற வேட்பாளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட வாய்ப்பு: காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி குற்றச்சாட்டு...

அடுத்த கட்டுரையில்
Show comments