இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஆளுனர் உரை சிறப்பம்சங்கள்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 7 ஜனவரி 2020 (07:46 IST)
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. தொடக்க உரையாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பேச தொடங்கியபோது திமுகவினர் பேச வாய்ப்பளிக்குமாறு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறினர்.

பிறகு தனது உரையை வாசித்த ஆளுனர் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும். தமிழக மக்கள் எந்தவொரு சமயத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறியுள்ளார்.

மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம், சேலம் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்குதல், நாகப்பட்டிணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல், கொசுவலைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆளுனர் பேசியுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியாவின் மொத்த கடன் 201.17 லட்சம் கோடி!.. ஒன்றிய அரசு தகவல்!..

நீட் போராட்டம்!.. ராகுல் கைது!. ஜனநாயகன் வசூலுக்காகவே மௌனம் காக்கிறாரா விஜய்?...

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. விவாதம் நடத்த தயார்... அமைச்சர் கிரண் ரிஜிஜு

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு.. வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்..

இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா கனிமொழி? விஜய்யின் பெண் வாக்காளர்களை இழுக்க முயற்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments