Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?

Updated: வெள்ளி, 23 நவம்பர் 2018 (21:32 IST)
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களுக்கு விரிசலை ஏற்படுத்தியது போல திமுக மற்றும் மதிமுகவுக்கும் இடையிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கஜா புயல் நிவாரண பணியை சரிவர தமிழக அரசு செயல்படவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் பார்வையிடவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.

ஆனால் திமுக தலைவர் மு,க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சூளுரைத்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வைகோவும், ஸ்டாலினும் தெரிவித்திருப்பது இரு கட்சிகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

25 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி நபர்.. அதில் ஒரு பெண் பாஜக எம்.எல்.ஏவின் மகள்...

வினாடி வினா போட்டியில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..

மம்தா பானர்ஜி மீது கல்வீச்சு, சேறு வீச்சு.. இறந்த தொண்டரின் வீட்டுக்கு சென்றபோது நடந்த சம்பவம்...

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள்.. கைரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்..

விஜய் டிவியில் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி... நடுவர்கள் ஓவியா, ஆரி, ராஜூ..

அடுத்த கட்டுரையில்
Show comments