ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்..!

Siva
வெள்ளி, 17 ஜனவரி 2025 (08:05 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் விடுமுறை தினமாக இருந்ததால், 13ஆம் தேதி ஆறு பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகைக்காக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால், இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று திமுக வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 20ஆம்தேதி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments