Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கடைகள்! – பல லட்சம் பொருட்கள் சேதம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (08:59 IST)
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று நள்ளிரவு திடீரென அந்த கடைகளில் ஒன்றான பெயிண்ட் விற்கும் கடை திடீரென தீப்பிடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. இதனால் விடிய விடிய தீ பற்றி எரிந்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

நாங்களா? அவங்களா?.. முடிவு பண்ணுங்க!.. முதல்வருக்கு சி.பி.எம் சண்முகம் கேள்வி!..

சட்டசபையை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைக்கிறார் விஜய்!.. ஸ்டாலின் தாக்கு!...

மாமா.. மச்சான்!. நல்லவேளையா நானும், ஸ்டாலினும் அங்க இல்ல.. துரைமுருகன் புலம்பல்...

சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சூப்பர்.. பாராட்டிய முக ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசினா நாங்க எப்ப பேசுறது?.. பிரேமலதா கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments