ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கடைகள்! – பல லட்சம் பொருட்கள் சேதம்!

ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (08:58 IST)
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று நள்ளிரவு திடீரென அந்த கடைகளில் ஒன்றான பெயிண்ட் விற்கும் கடை திடீரென தீப்பிடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. இதனால் விடிய விடிய தீ பற்றி எரிந்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments