என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:41 IST)
என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இரண்டாவது மற்றும் இறுதி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற எஞ்சினியரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
2-வது மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் மாணவர்களை தவிர பிற செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
இந்த மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் மே 21-ந்தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாளாக கருத்தில் கொண்டு, மே 21-ந்தேதி வரையிலான நாட்களுக்கு இடைப்பட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம். வகுப்புகள் அரசின் உத்தரவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும்.
 
இவர்களுக்கான செய்முறைத்தேர்வு மே 24-ந்தேதியும், எழுத்து தேர்வு ஜூன் 2-ந்தேதியும் தொடங்கி நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜூலை 1-ந்தேதி தொடங்கும்.
 
இதேபோல், டிசம்பர்-மே மாதத்துக்கான இறுதி செமஸ்டர் வகுப்புகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இவர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ந்தேதி ஆகும். இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 15-ந்தேதி நடைபெறும். எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26-ந்தேதி முதல் நடைபெறும்.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

எல்லாம் காட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு நோட்டீஸ்! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு..!

ஆபத்தான தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி!

தவெகவின் அடுத்த இலக்கு டெல்லி: மாநிலங்களவையில் தடம் பதிக்க தயாராகும் முதலமைச்சர் விஜய்!

கட்டணமில்லா பேருந்து வேண்டாம், நேரத்திற்கு வந்தால் போதும்: பேருந்து சேவை குறித்து பெண்மணியின் குமுறல்

திமுக தோல்விக்கு இந்த பேச்சு தான் காரணம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments