பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் விண்ணப்பம் பெற குவிந்த மாணவர்கள்..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (07:17 IST)
நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நேற்று பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பொறியல் படிப்புக்கு விண்ணப்பம் பெற முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் குவிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
2024-25 ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
https://www.teneaonline.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலமும், இ சேவை மையங்கள் மூலமும் மாணவர்கள் நேற்று விண்ணப்பித்துள்ளனர். 
 
நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் கால அவகாசம் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியல் படிப்புக்கு மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

தன்னை தோற்கடித்த த.வெ.க-வுக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகளை ஸ்டாலின் வெளியேற்றுவாரா? அ.தி.மு.க கேள்வி

மே மாத மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு.. விஜய் அரசு வெறும் 5 நாட்களிலேயே உரிமைத்தொகை வழங்கியது

விஜய் பிரதமராகும் வாய்ப்பிருக்கு!. அவர் ஜாதகம் அப்படி!. 30 வருஷத்துக்கு அவர்தான்!.. ராதன் பண்டிட் பேட்டி.

அண்ணாமலையின் அனல் பறக்கும் விமர்சனம்: சனாதன தர்மம் குறித்த அரசியல் மோதல்

200 யூனிட்டுக்கள் இலவசம்.. 500 யூனிட் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வரும்? முன்பு எவ்வளவு இருந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments