Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வரிசையில் நிற்க வேண்டாம்.. மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:09 IST)
ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்சார ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் எடுக்கவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும் நிலை உள்ள நிலையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது யூடிஎஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மின்சார ரயிலுக்கான டிக்கெட்டுகளை வரிசையில் காத்திருக்காமல் எளிதில் ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து கூட டிக்கெட்டுகளை பெற்று அதன் பின்னர் 2 மணி நேரத்திற்குள் ரயில் நிலையத்தை அடைந்து அந்த டிக்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை எப்படி எடுக்க வேண்டும் என்பது வீட்டில் தற்போது பார்ப்போம்:

UTS செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். மொபிஐ எண் கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும் . அதன்பின் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அதன்பின் டிக்கெட் க்யூ ஆர் கோடு முறையில் காட்டப்படும் டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம்.

Edited by Siva
 

எல்லாம் காட்டு

வி-வடிவ உடற்கட்டை உருவாக்குவது எப்படி: அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகரின் மகன் ஜோசப் பேனா அறிவுரை..

திமுக ஆட்சியின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து!.. தவெக அரசு அதிரடி...

பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் முன்னிலையில் வந்தே மாதரம்.. பாராளுமன்றத்தில் இதுவே முதல்முறை..

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்த பேங்க் ஆப் அமெரிக்கா.. ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் அல்ல ரூ. 18,268 கோடி ரூபாய்...

சென்னை பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து!.. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments