Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கட்டணம் திடீர் உயர்வா? தேர்தல் முடிந்தவுடன் தமிழக அரசு தரும் ஷாக்..!

Written By Siva
Updated: வெள்ளி, 10 மே 2024 (07:47 IST)
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகம் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பில் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் போலியானது. மேலும் இணையதளத்தில் பரவி வரும் கட்டண உயர்வு விபரம் என்பது தமிழ்நடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07ன்படி 9.9.2022ம் தேதியின் படியான கட்டண விகிதம். இது முற்றிலும் பழைய செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டணம் உயர்வு இல்லை என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது
 
இதன் மூலம் தமிழ்நாட்டில் மின் கட்டணம் புதிதாக உயர்த்தப்படவில்லை என்றும் ஏற்கனவே உதித்தப்பட்ட மின்கட்டணத்தை புதிதாக உயர்த்தப்பட்டது போல் சிலர் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்றும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் எந்த நேரமும் மின் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

உச்சநீதிமன்றம் சொன்னா கேட்கணும்!.. முதல்வர்கள் மாநாட்டில் விஜய் பேசியது என்ன?..

விடுமுறை நாளில் ரேபிடோ ஓட்டி சம்பாதித்த கல்லூரி மாணவர்.. தினமும் ரூ.1200 வருமானம்...

இந்தியா, பாகிஸ்தான் தூதரங்களில் திடீர் மாற்றம்.. உலக நாடுகளின் கவனத்தை பெற்ற நடவடிக்கை...!

ஸ்கார்ட்லாந்து எம்பியை கைப்பிடித்த கேரள பெண்.. குருவாயூர் கோவிலில் திருமணம்..

மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கும் நல்லது!.. டிகே சிவக்குமார் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments