மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..

Arun Prasath
வெள்ளி, 1 நவம்பர் 2019 (08:44 IST)
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களின் இடங்களை காலி இடங்களாக அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..

CBSE பொதுத்தேர்வின் மதிப்பெண் மறுமதிப்பீடு.. எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு..!

கரும்புச்சாறு விற்கும் வியாபாரிக்கு இன்ஸ்டாவில் 1.25 லட்சம் பாலோயர்கள்.. ஆச்சரியத்தில் இளம்பெண்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக ஆதரவா? பாஜகவிடம் நெருங்குகிறதா திமுக?

திருச்சி கிழக்கில் தவெக நிற்க சொன்னார்கள், முடியாது என்று கூறிவிட்டேன்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments