1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (15:29 IST)

இரு பக்கமும் தாக்கும் புயல்கள்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அரபிக்கடலில் மஹா புயல் மையம் கொண்டுள்ள நிலையில் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அது தீவிர புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “மஹா புயலினால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கேரளா மற்றும் லட்சத்தீவுகள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” எனவும் கூறியுள்ளார்.

மேற்கொண்டு நவம்பர் 4ம் தேதி முதல் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.