தேர்தலில் வாய்ப்பளிக்காத திமுக; பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ!

ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் அனுமதிக்கப்படாததால் பாஜகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாலர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக உள்ள திமுகவை சேர்ந்த சரவணனுக்கு தற்போதைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுகவிலிருந்து விலகியுள்ள எம்.எல்.ஏ சரவணன் இன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சரவணன் பாஜக சார்பில் மதுரை வடக்கில் போட்டியிடுவாரா என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

எல்லாம் காட்டு

மன்மோகன்சிங் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.. முன்னாள் தேர்தல் கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்...

விஜய் அரசு இதுவரை நன்றாக இல்லை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா

பொறியியல் படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு.. விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..

எங்களுக்கு திமுக மட்டும் தான் எதிரி.. அண்ணாமலை வரவை ஆரோக்கியமாக பார்க்கிறோம்: தவெக

மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ்? ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments