காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால் பக்தர்கள் அனுமதி: சதுரகிரியில் மலையேற குவிந்த பக்தர்கள்...!

திங்கள், 31 ஜூலை 2023 (16:15 IST)
சதுரகிரி மலையில் காட்டுத்தீ இருந்ததை அடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததை அடுத்து  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவதுண்டு 
 
இந்த நிலையில் ஆடி மாத பௌர்ணமியில் அதிக பக்தர்கள் வரும் நிலையில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது முழுவதுமாக காட்டுத்தீ கட்டுக்குள் வந்து விட்டதை அடுத்து மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் பக்தர்கள் மலையேறி வருவதாகவும்  மலையில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments