வியாழன், 26 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (03:17 IST)

கட்டையால் அடித்து கல்லூரி மாணவி கொலை - பலாத்காரம் செய்யப்பட்டாரா?

நாகப்பட்டினம் அருகே கட்டையால் அடித்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
நாகை மாவட்டம் ஆக்கூர் அருகே அப்பராஜபுரம் புத்தூரில் வசித்துவருவர் தீபிகா (17). இவர் பூம்புகார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
 
இந்தநிலையில், நேற்று காலை அவரது வீட்டுக்கு அருகே உள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் தீபிகா பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவல் தெரிந்ததும் பெற்றோரும், ஊர் மக்களும் போய் பார்த்தபோது சடலமாக கிடந்தது தீபிகா தான் என்பதை உறுதி செய்தனர்.
 
தகவல் அறிந்து, பொறையார் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தீபிகாவின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறியழுதனர்.
 
தீபிகாவின் முகத்தில் பலத்த காயம் இருந்தது. எனவே அவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பலாத்கார முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.