Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை: 'ஈஷா' மையத்தை பார்வையிட்ட கட்டிடக்கலை மாணவர்கள்

Written By Sinoj
Updated: சனி, 25 பிப்ரவரி 2023 (22:30 IST)
நாகை கீழ்வேளூரில் இருந்து கட்டிடக்கலை கற்றல் ஆய்விற்காக வருகை புரிந்தனர்.
 
நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர். 
 
ஈஷா யோகா மையத்திற்கு இன்று காலை கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் இருந்து 28 கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஈஷா மைய வளாகத்தில் உள்ள சூர்ய குண்டம், நந்தி, லிங்கபைரவி, சந்திரகுண்டம், தியானலிங்க மற்றும் ஆதியோகி திருவுருச் சிலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு அவ்விடங்களின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 
 
ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தருகின்றனர். ஈஷாவின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் அதன் நுணுக்கங்களை வருகை தரும் பலரும் வியந்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.. வி.எஸ்.பாபு பேட்டி...

எம்பிக்களுக்கு அலுவலகம் கட்டி தாருங்கள்.. முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்பி..

நண்பனை நரபலி கொடுத்த நபர்.. தலையை வெட்டி வீட்டில் பூஜை செய்த கொடூரம்!...

காங்கிரஸ் இல்லையென்றால் விஜய் முதல்வராகியிருக்க முடியாது: மாணிக்கம் தாகூர்..

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments