சி.ஏ.ஏ போராட்டம் வழக்குகள் ரத்து - முதலமைச்சர் !

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:49 IST)
சி.ஏ.ஏ போராட்டம் மற்றும் கொரோனா ஊரடங்கை மீறிய வழக்குகள் ரத்து என முதலமைச்சர் அறிவிப்பு. 

 
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது  பதியப்பட்ட வழக்குகள் மற்றும் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக மாநிலம் முழுவதும் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதற்காக பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். 
 
பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அதே போல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது போட்டப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!.. விரைவில் விடுதலை?!.. தமிழக அரசு அதிரடி!..

மத்திய அரசை விரைவில் கவிழ்ப்போம்.. மம்தா பானர்ஜியின் அதிரடி சபதம்!

காற்றிலிருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்.. சக்சஸ் ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.10?

எரிபொருள் விலை உயர்வு!. Swiggy, Zomato கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!...

அதிமுகவில் பதவி கேட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா!.. பழசெல்லாம் மறந்துபோச்சா!.. ஓ.எஸ்.மணியன் பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments