Daily Horoscope

132 பேரை பலி கொண்ட விமான விபத்து! – சீன விமானத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 27 மார்ச் 2022 (11:26 IST)
சீனாவில் கடந்த 21ம் தேதி நடந்த பயணிகள் விமான விபத்தில் கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் தேதி சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து புறப்பட்டு குவாங்சு மாகாணத்திற்கு 132 பயணிகளுடன் பயணித்த போயிங் 737 விமானம் நடுவானில் மாயமானது. பின்னர் கிடைத்த தகவலின்படி அந்த விமானம் விபத்திற்குள்ளானது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 132 பேரும் இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான விபத்தின் காரணம் குறித்து அறிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் கருப்பு பெட்டி கண்டறியப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments