Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா; அதிர வைக்கும் சென்னை நிலவரம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 21 ஜூன் 2020 (11:32 IST)
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு சென்னையில் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,148 பேரும், தண்டையார் பேட்டையில்  4,963 பேரும், தேனாம்பேட்டையில் 4,785 பேரும், கோடம்பாக்கத்தில் 4,329 பேரும், அண்ணா நகரில் 4,142 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.

எல்லாம் காட்டு

காவிரி விவகாரம் திரிஷா விவகாரமாக திசை திரும்புகிறது: காயத்ரி ரகுராம்...

12 மணி வரை உதயநிதியை கைது செய்யக்கூடாது!.. உயர் நீதிமன்றம் தடை!...

கைதுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!. கைதிலிருந்து தப்பிப்பாரா உதயநிதி?!..

ஆபாசமாக பேசிய உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!.. இன்று கைது?...

விஜயை ஆபாசமாக பேசிய புகார்!.. உதயநிதி வீட்டில் காவல்துறை.. விரைவில் கைது?..

அடுத்த கட்டுரையில்
Show comments