சென்னை பப் இளம்பெண்கள் விவகாரம்.. நடந்ததே வேறு.. அதிர்ச்சி தகவல்..!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:50 IST)
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் மதுபாரில் இளம் பெண்கள் உள்பட  சிலர் மது போதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் அங்கு வந்ததால் கலைந்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

ஆனால் இந்த சம்பவத்தில் நடந்ததே வேறு என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன. தனியார் மதுபாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த மதுபாருக்குள் 5 பேர் நுழையும் முயன்றதாகவும் தெரிகிறது.

ஆனால் மதுபாரின்  காவலர்கள் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தனியார் ஊடக செய்தியாளர் ஒருவரை வரவழைத்து அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாகவும் இதனை அடுத்து காவல் துறையினர் வந்து மதுபாரில் நடந்த சட்ட விதி மீறலை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

 அந்த ஐந்து நபர்களை மதுபாரின் காவலர்கள் உள்ளே விட்டிருந்தால் இந்த பிரச்சனை வெளியே தெரிந்திருக்காது என்றும் தங்களை உள்ளே விடாததால் பழிவாங்கும் நோக்கில் அவர்கள் காவல்துறையினரிடம் போட்டு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

எல்லாம் காட்டு

மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி!

தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!

அதிமுகவின் 4வது விக்கெட் காலி.. வேலுமணி ஆதரவாளர் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தவெக அரசின் ஆரம்பக்கட்ட சறுக்கலா?

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments