சென்னையில் மேலும் ஒரு ஏடிஎம்-இல் ரூ.16 லட்சம் கொள்ளை!

புதன், 23 ஜூன் 2021 (07:30 IST)
சென்னையில் உள்ள எஸ்பிஎம் ஏடிஎம்களில் ஏற்கனவே கொள்ளை நடந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஏடிஎம்மில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் டெபாசிட் செய்யும் மெஷினிலிருந்து நூதனமான முறையில் வடமாநில கொள்ளையர்கள் சிலர் 40 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தனிப்படை அமைத்து வடமாநிலங்களில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் அதேபோன்ற நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையில் பெரியமேடு எஸ்பிஐ கிளையின் மேலாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 190 முறை ஒரே அக்கவுண்டில் நூதன முறையில் ரூபாய் 16 லட்ச ரூபாய் திருட்டு நடைபெற்றது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments