மன்னிப்பு கேட்பீர்களா திருமாவளவன்? பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி

வியாழன், 21 அக்டோபர் 2021 (22:34 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இந்தியாவில் 100 கோடி பெயர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பெரும் சாதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆரம்பத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் தற்போது மன்னிப்பு கேட்பாரா என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்று மக்களை அச்சப்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வதை தடுக்க முயன்ற திருமாவளவன்  அவர்களே, இன்று நூறு கோடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது இந்தியா. நீங்கள் அன்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்பீர்களா? என கூறியுள்ளார்.
 
 

எல்லாம் காட்டு

பினராயி விஜயன் வீட்டில் சோதனை.. ED அதிகாரிகள் காரை அடித்து நொறுக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்..

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 சிறப்பு தரிசனம் ரத்து.. அனைவருக்கும் பொது தரிசனம் தான்...

எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை.. அதிமுக ஒற்றுமையாக உள்ளது: எஸ்பி வேலுமணி விளக்கம்..!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா சிவி சண்முகம்?!.. நடப்பது என்ன?..

அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீங்க!.. விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments