சட்டசபை கூடும் தேதி, இடம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Written By Mahendran
Updated: திங்கள், 3 ஜனவரி 2022 (15:07 IST)
தமிழக சட்டசபை கூடும் தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை சபாநாயகர் அப்பாவு அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் தான் கூடியது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் கோட்டையில் உள்ள சட்டமன்றத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டசபை கூடும் என்றும் ஜனவரி 5ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்
 
2 நோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்றும் இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவும் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments