அண்ணா பல்கலை தேர்வு ஒத்தி வைப்பு: மாணவர்கள் கோரிக்கை ஏற்பு

வெள்ளி, 3 நவம்பர் 2017 (06:35 IST)
சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சென்னையின் பெரும்பாலான பகுதி ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.



 


இந்த நிலையில் நேற்றிரவே சென்னை உள்பட ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அண்ணா பல்கலை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் மாணவர்கள் டுவிட்டரின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர்களுக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து சென்னை மாவட்ட ஆட்சியரும், வருவாய்துறை அதிகாரிகளும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருடன் ஆலோசணை நடத்தினா். இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் உறுதி செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments