கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது: அமமுக வேட்பாளர் திடீர் பல்டி!

புதன், 17 ஏப்ரல் 2019 (09:01 IST)
நேற்று அமமுக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர்களின் உதவியுடன் சோதனை செய்தபோது ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்து அமமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
 
இந்த நிலையில் ஆண்டிபட்டியில்   தேர்தல் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என்றும், அதிமுகவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நாங்கள்தான் தகவல் தந்தோம் என்றும், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் அதிமுகவை காப்பாற்றுவதற்காக அமமுகவின் பணம் என பொய்யாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுவதாகவும், காவல்துறையினர் வானத்தை நோக்கி சுட்டதாக கூறுவது பொய் என்றும், வானத்தை நோக்கி சுடாமல் எங்களை அச்சுறுத்த டம்மி புல்லட் மூலம் வணிகவளாகத்திலேயே சுட்டனர் என்றும் அமமுக வேட்பாளர் கூறியுள்ளார். இவருடைய பேட்டியால் உண்மையில் கைப்பற்றப்பட்ட ரூ.1.5 பணம் யாருடையது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை!.. டெல்லியில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

முதல்வர் விஜய்யை போலவே அண்ணாமலையை சந்திக்கவும் நேரம் ஒதுக்காத அமித்ஷா? உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை

ஸ்டாலினுக்கு நெருக்கமான ப.சிதம்பரம், முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு? தமிழக அரசியலில் பரபரப்பு

கல்வி கட்டணம் வெளிடையாக தெரிவிக்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. இதுதான் மாற்றம்..!

திமுகவுக்கு அல்வா!. இந்தியா கூட்டணியில் தவெக?.. ராகுல்காந்தி போடும் ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments