எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: எழும்பூரில் மீண்டும் ஆதித்தனார் சிலை

புதன், 20 செப்டம்பர் 2017 (05:33 IST)
சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் ஆதித்தனார் சிலை கடந்த 30 வருடங்களாக இருந்த நிலையில் சமீபத்தில் இந்த சிலை அகற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சிலை அமைந்திருந்த இடத்தில் சிக்னல் அமைக்கும் பணிக்காவும் சிலையைச் சுற்றி புல் வெளி போன்ற அமைப்பு ஏற்படுத்தவே அகற்றப்பட்டதாகவும், மீண்டும் பணிகள் முடிந்ததும் அதே இடத்தில் சிலை வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.



 
 
இந்த நிலையில் சொன்னது போலவே நேற்று மீண்டும் ஆதித்தனார் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. இதற்கு தமிழக அரசுக்கு ஆதித்தனார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர். 
 
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி ஆதித்தனார் பிறந்தநாள் வரவுள்ளதை அடுத்து அன்றைய தினம் சிறப்பாக பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தனியார் கல்லூரியில் அதிக கட்டணம்!.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!...

தவெக கொடி கட்டிய கார்!.. தவெகவில் இணைகிறாரா சிவி சண்முகம்?!..

உடம்பு சரியில்ல.. விசாரணைக்கு வர மாட்டேன்!.. லஞ்ச ஒழிப்பு துறையிடம் சொன்ன எ.வ.வேலு..

அதிமுக மட்டுமில்ல!.. திமுகவுக்கும் ஸ்கெட்ச்!.. தவெகவில் இணைந்த உதயநிதி டீம்!

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி.. ஆர்.எஸ்.எஸ். கூறிய அதிர்ச்சி கருத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments