8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய உத்தரவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி

புதன், 29 ஜனவரி 2020 (08:13 IST)
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய உத்தரவு ஒன்றை தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை மூலம் அனுப்பி உள்ளது மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இந்த சுற்றறிக்கையால் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
மேலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த பரிசீலனையில் தமிழக அரசு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென தொடக்கக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...

தவெக இருக்கும் கூட்டணியில் திமுக இருக்காது: திருமாவளவன் யோசனை நிராகரிப்பு...!

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 1000 ரூபாய் கடன்.. வட்டியுடன் சேர்த்து நண்பருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments