அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Updated: திங்கள், 13 டிசம்பர் 2021 (10:22 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கி சென்னை உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து கடந்த 10 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

எதுக்கு வந்தீங்க?!.. சீன் போடப்போன ஜூலி!.. விரட்டி அடித்த போராட்டக்குழு!..

இந்த ரெண்டையும் செய்யணும்!.. போராட்டம் தொடரும்.. CJP அபிஜீத் தீப்கே திட்டவட்டம்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

பணிந்தது பாஜக!.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா!.. இளைஞர்களின் போராட்டம் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments