Daily Horoscope

ஆன்லைன் பாடங்கள் புரியாததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: அதிர்ச்சி தகவல்

Written By siva
Updated: புதன், 16 செப்டம்பர் 2020 (07:26 IST)
ஒரு பக்கம் நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து தங்கள் விலைமதிப்பில்லா உயிரை இழந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் ஆன்லைன் பாடங்கள் இல்லாததாலும் ஆன்லைன் பாடங்களை கற்க செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாததாலும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது 
 
இந்த நிலையில் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சிவகங்கை அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சுபிக்ஷா. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை படித்து வருகிறார் 
 
இந்த பாடங்களை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் தவித்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் புரியாமல் போனால் பத்தாம் வகுப்பில் அதிக அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாதே என்ற கவலையில் சுபிக்ஷா சில நாட்களாக இருந்திருக்கிறார் 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பதும் இதற்காக இவர் முதலமைச்சர் பழனிச்சாமியின் கைகளால் பரிசு பெற்றவர் என்றும் குறிப்பிடத்தக்கது ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட மாணவியால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments