டெங்கு காய்ச்சல்.. சென்னை சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்..!

Written By Mahendran
Updated: திங்கள், 30 அக்டோபர் 2023 (22:30 IST)
சென்னையை சேர்ந்த சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்ததாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அடுத்த பூந்தமந்தலில் 15 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சல் காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். ராஜ் பாலாஜி என்ற அந்த சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜ் பாலாஜி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 
 
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் குறைந்து வருவதாக தமிழக அரசு கூறிவரும் நிலையில்  டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிர் இழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments