டெங்கு காய்ச்சல்.. சென்னை சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்..!

திங்கள், 30 அக்டோபர் 2023 (17:11 IST)
சென்னையை சேர்ந்த சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்ததாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அடுத்த பூந்தமந்தலில் 15 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சல் காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். ராஜ் பாலாஜி என்ற அந்த சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜ் பாலாஜி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 
 
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் குறைந்து வருவதாக தமிழக அரசு கூறிவரும் நிலையில்  டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிர் இழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...

உலகமே உங்கள சுத்திதான் இயக்குற மாதிரி நினைப்பா?!. விஜய்க்கு பழனிச்சாமி பதிலடி...

நாங்கலாம் கோட் சூட் போடக்கூடாதா?.. இதான் காரணம்!.. திருச்சியில் விஜய் அனல் பேச்சு!....

கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..

இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..

அடுத்த கட்டுரையில்
Show comments