இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதால் மிகவும் சோர்வாக காணபட்டனர்.இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச்...