மத்திய அரசின் 2009-10ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உலக அளவிலான பொருளாதார சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9 விழுக்காட்டை எட்டும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளதாக புதுடெல்லியில் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் கூறினார்.கிராமப்புற மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட் என்று கூறிய அவர், குறுகிய கால பொருளாதார தேவையை வெளிப்படுத்தும் வகையிலும், நடுத்தர கால...