ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தொடர்ந்து 8 ஆவது நாளாகப் பதற்றம் நிலவுகிறது. வடக்கு காஷ்மீரில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.