மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவது என்று இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதன் ஒருகட்டமாக ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி) கட்சியின் தலைவர் அஜீத் சிங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் இன்று சந்தித்துப் பேசினார்.அஜீத் சிங் கட்சிக்கு மக்களவையில் 3 உறுப்பினர்கள் உள்ளனர்.புதுடெல்லியில் உள்ள அஜீத் சிங்கின் வீட்டிற்கு சென்ற பரதன், இடதுசாரிக்கட்சிகளின் அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு...