1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. வாய்ப்புகள்

ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பு!

ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பு ஓதுவார் பயிற்சி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
தமிழக அரசால் நடத்தப்படும் உதவித் தொகையுடன் கூடிய ஓதுவார் பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் செயல்படும் ஓதுவார் பயிற்சி நிலையத்தில், ஓதுவார் பணிக்கு 3 ஆண்டு காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தகுதிகள்: ஓதுவார் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்துவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8- வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2008-தேதிப்படி 14 வயது நிரம்பியவராகவும், 20 வயதுக்குட்பட்டவராகவும் இருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர் ஆன்மீகம், இசை ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், மது, புலால் உண்ணாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உதவித் தொகையுடன் பயிற்சி: ஓதுவார் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பயிற்சி நிலையத்திலேயே தங்க வேண்டும். அவர்களுக்கு இலவச உணவு, சீருடை, உறைவிடம் மற்றும் பயிற்சிக்கால உதவித்தொகை ஆகியன வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், தந்தை/ காப்பாளர் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து வரும் 29.09.2008 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை 'இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
About Writer
Webdunia