Daily Horoscope

விப்ரோ சி.இ.ஓ திடீரென பதவி விலகல்.. என்ன காரணம்?

Written By Siva
Updated: ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:26 IST)
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்ட் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார் 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ பதவியை ஏற்ற தியோரி, விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் இவர் சிஇஓ பதவிக்கு வந்தவுடன் விப்ரோ உயர்மட்ட நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்தார், அப்படி செய்தால் தான் நிறுவனம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் முடிவு செய்தார் 
 
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்த தியோரி, திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது விலகல் விப்ரோ நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ என்ன காரணத்திற்காக விலகினார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

2027 ஜனவரி எய்ம்ஸ் மருத்துவமனை ஓப்பன்!.. மத்திய அரசு தகவல்!...

யூபிஐ கட்டணத்தால் மக்களுக்கும் வணிகர்களுக்கும் வந்த குழப்பம்.. மீண்டும் ரூபாய் நோட்டு பரிவர்த்தனையா?

கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை.. மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை...

சிறிய முதலீட்டில் டெலிகிராம் மூலம் ஆரம்பித்த ஸ்டார்ட் அப்.. இன்று 10 லட்ச ரூபாய் வருமானம்..

வீட்டை எதிர்த்து திருமணம் செய்த பெண்ணை கடத்திய மர்ம நபர்கள்.. கடத்திய கார் விபத்துக்கு உள்ளானதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments