Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை போறீங்களா? இதை கவனிங்க! – சபரிமலை தரிசன நேரம் மாற்றம்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 22 நவம்பர் 2022 (10:18 IST)
சபரிமலையில் மண்டலபூஜைக்காக ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் குவிந்து வரும் நிலையில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.

தற்போது மண்டலபூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் கடந்த 6 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் நெருக்கியடித்து 18 படிகளில் ஏறுவதால் மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ குழுவும் ஆயத்தமாக உள்ளது.

ALSO READ: ஒரு நாளில் 294 பாதிப்புகள் மட்டுமே.. 05 பேர் பலி! – இந்தியாவில் முடிவை நெருங்கும் கொரோனா!

இந்நிலையில் பக்தர்கள் அதிகளவில் வருவதால் தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை பூஜைகளுக்கு பிறகு மூடப்படும் நடை மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 3 மணிக்கே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

எல்லாம் காட்டு

நீரை தேக்கிவச்சா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போய்விடுவோம்!.. டி.கே.சிவக்குமார் கோரிக்கை!...

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்!.. டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!..

உண்மை தெரியாம தப்பா பேசுறாங்க!.. குடும்பம் பற்றி பேசும் ஜேசன் சஞ்சய்...

கர்நாடகாவில் கனமழை!.. நிரம்பும் அணைகள்!.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா?..

இனிமே இளைய கலைஞர்!.. உதயநிதியை முன்னிருத்தும் திமுக!..

அடுத்த கட்டுரையில்
Show comments