1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (10:51 IST)

கொரோனா வைரஸை தீயிட்டு கொளுத்திய மக்கள் – வித்தியாசமான ஹோலி கொண்டாட்டம்!

வட இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தில் கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலிலும் கூட வட இந்திய பகுதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ள போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும் பாதுகாப்பான முறையில் ஹோலி கொண்டாடவும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையின் வொர்லி பகுதியில் கொரோனா வைரஸ அரக்கானாக சித்தரித்து சிலை செய்து அதை கொளுத்தி ஹோலி கொண்டாடியுள்ளனர்.