“நாங்கள் ஏன் குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம்?” ஜெயகுமார் விளக்கம்

Arun Prasath
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:39 IST)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல மாணவர் இயக்கங்கள் போராடி வருகின்றன. பல இடங்களில் வன்முறைகளும் வெடிக்கிறது.

குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருப்பதால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களை சந்தித்த போது, ”இலங்கை தமிழர்களுக்கு தேவை இரட்டை குடியுரிமை தான், ஜெயலலிதா இருந்தபோதே பொதுக்குழுவில் இது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்” என கூறியுள்ளார்.

மேலும் அவர், “பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments