Daily Horoscope

ஆர்எஸ்எஸ் விழாவில் ராகுல் காந்தி?

Updated: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:16 IST)
ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்த மாதம் நடத்தவிருக்கும் விழாவிற்கு ராகுல் காந்திக்கு அழைப்புவிடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் இந்த விழா நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் இதில் விவாதம் நடத்தப்பட உள்ளது. 
 
இந்த விழாவில் பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது, அவர்களோடு சேர்த்து ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவுள்ளதாம். ஆனால், ராகுல் காந்தி இந்த அழைப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
சமீபத்தில் சில கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அப்படி அழைக்கப்பட்டால், ராகுல் காந்தி மரியாதை கருதி செல்ல வாய்ப்புள்ளது எனவும் செய்திகள் வெளியாகிறது. 

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments