1 ஓட்டு போட்டால் பாஜகவுக்கு 2 ஓட்டு என்பதில் உண்மை இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்.

Mahendran
வியாழன், 18 ஏப்ரல் 2024 (14:40 IST)
கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
கண்ட்ரோல் யூனிட்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும் என்றும், அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும் என்றும், இதைதொடர்ந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனுப்பும் பதிலை மீண்டும்  கண்ட்ரோல் யூனிட் பதிவு செய்து கொள்ளும்  என்றும், இதுதான்  கண்ட்ரோல் யூனிட் செயல்பாடு என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
 
EVM & VVPAT இயந்திரங்கள் தொடர்பான கேள்விகள் வெறும் பயம் மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல்  ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘கண்ட்ரோல் யூனிட் எனப்படும்  மூல இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நாடாளுமன்றத்தில் மாறியது சீட் அமைப்பு! காங்கிரஸை விட்டு தள்ளி அமரும் திமுக எம்.பி.க்கள்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி!.. சவுதி, குவைத், ஈராக் மீது ஈரான் தாக்குதல்!..

மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்!.. யாருடனெல்லாம் மீட்டிங்?..

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட்

கள்ளக்காதல்.. மனைவி டார்ச்சர்!.. 6 மாதங்களில் 554 கணவன்மார்கள் மரணம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments