Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு: நன்றிக்கடன் செலுத்தும் தேவகவுடா

Updated: செவ்வாய், 24 ஜூலை 2018 (07:45 IST)
தேவகவுடாவின் மகன் குமாரசாமி, கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில் அதற்கு நன்றிக்கடன் செலுத்த ராகுல் காந்தி பிரதமராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிக்கும் என முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
 
நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா கூறியதாவது: கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, 79 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும்,, 38 தொகுதிகளில் ம.ஜ.த., கட்சியும் வெற்றி பெற்றது, இருப்பினும் மதஜ கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கும் முடிவை ராகுல் எடுத்தார். அவரது இந்த தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
 
முதிர்ச்சியான தலைவர்கள் எடுக்கும் முடிவை ராகுல் காந்தி எடுத்துள்ளதால் அவரே நாட்டை ஆளும் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் என்ற முடிவை எடுத்துள்ளேன். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த மஜத கட்சி முயற்சி எடுக்கும். இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார். 

எல்லாம் காட்டு

சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?

இளைஞரை அறைந்த எஸ்.ஐ!.. திருப்பி அறைந்த இளைஞர்!.. விசிக போராட்டத்தில் பரபரப்பு!. (வீடியோ)..

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை உடனே திறக்க வேண்டும்.. கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

செல்லாது செல்லாது!.. தமிழகத்துக்கு தண்ணியை திறந்துவிடுங்க!.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!...

அடுத்த கட்டுரையில்
Show comments