2020 முதல் ரூ.2000 செல்லாது? வங்கி தரப்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

வியாழன், 24 அக்டோபர் 2019 (15:35 IST)
ஜனவரி 1, 2010 முதல் ரூ.2000 நோட்டு செல்லாது என வெளியாகி வரும் தகவல்களுக்கு வங்கி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
 
ரிசர்வ் வங்கி ஜனவரி 1 ரூ.1000 நோட்டுகளை வெளியிட உள்ளது. இதனால் ரூ.2000 செல்லாது, அது விரைவில் திரும்பி பெறப்படும், எனவேதான் எடிஎம் இயந்திரங்களில் கூட ரூ.2000 நோட்டு வைக்கப்படுவதில்லை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில் இந்த தகவலுக்கு வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரூ. 1000 வெளியீடு, ரூ.2000 செல்லாது என ரிசர்வ் வங்கியோ, அரசோ தெரிவிக்கவில்லை. புதிய ரூ.1000 நோட்டின் புகைப்படமும் பொய்யானது. 
 
ரிசர்வ் வங்கி, மத்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் செய்திகளை மட்டும் நம்புங்கள். சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள செய்திகள் பொய்யானவை, வெறும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments